Tuesday, August 25, 2015

NAAN PAAVITHAN AANALUM NEER

1. நான் பாவிதான் - ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.

2. நான் பாவிதான் - என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.

3. நான் பாவிதான் - மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.

4. நான் பாவிதான் - மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5. நான் பாவிதான் - இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6. நான் பாவிதான் - அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.

No comments: