Tuesday, August 25, 2015

NALLAVI OOTRUM DEVA LYRICS


நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே --- நல்லாவி

2. மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே --- நல்லாவி

3. ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும் --- நல்லாவி

4. பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க --- நல்லாவி

No comments: