Tuesday, August 25, 2015

NAL MEETPER PATCHAM NILLUM RATCHANYA VEERARE

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.

2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்.

3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;
சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்.

4. நல் மீட்பர் பட்சம் நில்லும்! போராட்டம் ஓயுமே;
வெம்போரின் கோஷ்டம், வெற்றி பாட்டாக மாறுமே;
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்;
விண் லோக நாதரோடே வீற்றரசாளுவார்.

No comments: