Saturday, September 24, 2022

Neethimanin koodarathil ratchippin -Neethiman Anthem

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும்

நீதிமான் நான் நீதிமான்
இரத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
கிருபையாலே உயர்த்தப்பட்ட நீதிமான்

ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல
தைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான் - 2

நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் கனிதரும் நீதிமான்
இலைகள் உதிரா மரம் நானே
நான் செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்
                   - நீதிமான் நான்

காருண்யம் என்னும் கேடகத்தால்
கிருபையினால் சூழ்ந்துகொண்ட நீதிமான்
சாவாமல் என்றும் பிழைதிருந்து
கர்த்தர் செய்கையினை விவரிக்கும் நீதிமான்
                   - நீதிமான் நான்

என் ஊக்கமான வேண்டுதல் பெலனுள்ளதால்
மாற்றங்கள் செய்யும் நீதிமான்
ஓ கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்
நீதியாய் மாறின நீதிமான்
                   - நீதிமான் நான்

No comments: