Tuesday, September 13, 2022

தகப்பனே தந்தையே தலைநிமிரச் செய்பவர் நீரே

தகப்பனே தந்தையே
தலைநிமிரச் செய்பவர் நீரே – 2 (1)

கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிரச் செய்பவர் நீரே – 2 (2)

1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர் – 2
ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை – 2

தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர் – 2 (…கேடகம் நீரே)

2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் – 2
அச்சமில்லையே கலக்கமில்லையே – 2

வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே – 2 (…கேடகம் நீரே)

3. ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே – 2
நீர் விரும்பத்தக்கவை தூய்மையானவை – 2

அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் – 2 (…கேடகம் நீரே)

No comments: