என் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும்
உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது
என் இதயம் மகிழ்ந்தது
நீர் போதும் என்றது
1. உம் நேசத்தாலே சோகமானேனே
உம் பாசத்தால் பிடிக்கப்பட்டேனே
உம் நாமத்திற்குள் சுகம் கண்டேனே
உம்மாலே இரட்சிக்கப்பட்டேனே
2. உம் கண்களில் கிருபை பெற்றேனே
உம் கரத்தால் சுமக்கப்பட்டேனே
உம் மடியில் நான் தேற்றப்பட்டேனே
உம்மாலே நான் வாழ்க்கை பெற்றேனே
No comments:
Post a Comment