Tuesday, September 13, 2022

உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா

 உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா

உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்

No comments: