Saturday, April 11, 2020

INDRU KANDA EGIPTHIYANAI

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

தண்ணீரை நீ கடக்கும் போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியால் கொடியேற்றிடுவார்

கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார்
பாதையிலே காக்கும் படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்

சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்

No comments: