Saturday, April 11, 2020

AAR IVAR AARAARO INDHA

ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார் ?
1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப் பொருள் தானிவரோ ? 
சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த 
மாவலரோ ? — ஆர்
2. மேசியா இவர்தானோ ? – நம்மை – மேய்த்திடும் நரர்கோனோ ? 
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ ? — ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ ? – நமது தேவனின் கண்மணியோ ?
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
ணொளியோ ? — ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ ? — ஆர்
5. ஜீவனின் அப்பமோதான் ? – தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர்தானோ ? — ஆர்

No comments: