Wednesday, January 22, 2020

THIKKATRA PILLAIKALUKKU SAGAAYAR NEERE

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2

1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்றுவிடுவீரோ
பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

2. கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

3.தாயென்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும் – 2
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

No comments: