Sunday, October 27, 2019

KAATHEERE ORU THEEDHUM ANUGAMAL

காத்தீரே காத்தீரே ஒரு தீதும் என்னை அணுகாமல்
சுமந்தீரே சுமந்தீரே என் பாதம் கல்லில் இடறாமல் (2)

உம்மைப் போல யாருமில்லை இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை - காத்தீரே

1.உம்மை விட்டு தூரம் சென்ற நேரம் கல்வாரியின் அன்பை நான் மறந்தேன் 
ஆயினும் உம் அன்பு குறையவில்லை தேடி வந்தீரே (2)

உம்மைப் போல யாருமில்லை
இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை - காத்தீரே

2.கடக்க முடியாத தூரம் தீராத வலி தரும் சோகம் செய்வதறியாத நேரம் வந்தீர் எனை தாங்கினீரே (2)

உம்மைப் போல யாருமில்லை
இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை - காத்தீரே

3.நண்பர் என்னை மறந்த போதிலும் தனிமை என்னை வாட்டிய நேரம் ஆதரவு அற்றவனாய் இருந்தேன் துணையானீரே (2)

உம்மைப் போல யாருமில்லை
இவ்வுலகில் எவரும் இல்லை
வானத்தின் கீழ் பூமியின் மேல்
உம்மைப் போல் ஒரு தெய்வம் இல்லை - காத்தீரே

No comments: