Friday, October 25, 2019

NEENGA MATTUM ELLENA

நீங்க மட்டும் இல்லேன்னா 
எங்கோ நான் சென்றிருப்பேன், 
எப்படியோ வாழ்திருப்பேன், 
மண்ணுக்குளே போயிருப்பேன், 
மரந்தும் போயிருப்பார் - 2.

1. நான் பிறந்த நாள் முதல்
இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீரே
ஆறுதல் தந்தீரே - 2
எப்படி சொல்வேன் 
என்னன்னு சொல்வேன் 
நீர் செய்ததை, 
ஒன்று, இரண்டு, மூன்று என்று 
என்ன முடியாதே... 
- நீங்க மட்டும்

2. எத்தனையோ கேள்விகள்
ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியல 
சொல்லியழ யாருமில்லை... -2 
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் 
நிம்மதி தந்து, 
நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்...

3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை... 
எப்படி சொல்வேன்
என்னையும் தேடி 
நீர் வந்ததை, 
தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை...

No comments: