Friday, October 25, 2019

URUGAADHO NENJAM NEGILATHO LYRICS

உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா
இராஜா இயேசு இராஜா (2)

கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
கலங்கியே கரைந்திடுமே (2)
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ

வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
வார்த்தை மாறிடாதே (2)
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
வாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ


என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்திடுவேன் (2)
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
உம் பாதம் சரணடைவேன் – உருகாதோ

No comments: