தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப-தில்லையே-
தந்தை தாயினும் மேலானவர்
தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2
மேற்குக்கும் கிழக்குக்கும்
எவ்வளவு தூரமோ
அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2
-தாய் மறந்தாலும்
மலைபோன்ற எந்தன்
மாபெரும் பாவங்களை
முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்
காலமெல்லாம் கண்ணீரை
வரவழைத்த பாவங்களை
கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே - 2
-தாய் மறந்தாலும்
4 comments:
🤗
True
True word of God composed song with melodious music.
God bless you
Post a Comment