Thursday, February 7, 2019

UNAKKEDHIRAANA AAYUDHANGAL LYRICS

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகனே
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை

உன்னை நான் காப்பாற்றி
அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்
இரவினிலும் பகலினிலும்
சேதமில்லாமல் காத்திடுவேன்
உன்னை கொண்டு மலைகளையும்
குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன்

ஏழு மடங்கு அக்கினியில்
சேதமில்லாமல் காத்திடுவேன்
ஒரு வழியாய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடச்செய்வேன்
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது
தடை செய்ய யாருமில்லை

சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்
உனக்கெதிராய் எழுதப்படும்
சட்டங்களை நான் மாற்றிடுவேன்
உன்னைக் கொண்டு தேசத்திலே
என் நாமம் முழங்கச் செய்வேன்

No comments: