Thursday, February 7, 2019

KAALAI NERAM INBA JEBA LYRICS

காலை நேரம் இன்ப ஜெய தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்

எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே

பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய்
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே

சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே


பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே

No comments: