தினமும் தினமும் எந்தன் நினைவானீரே
என்னைத் தேடிவந்து தேற்றின தென்றல்
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது என்னை மறவாதது - 2
சரணங்கள்
1. பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது என்றும் செழிப்பானது
- உயிரே உயிரே
2. ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்பிற்கு அணை இல்லையே
அது குறையாதது என்றும் நிறைவானது
- உயிரே உயிரே
3. நீரின்றி வாழ்வில்லை
உம் நினைவன்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா
எனக்கு வேண்டும் தேவா
- உயிரே உயிரே
No comments:
Post a Comment