Thursday, January 31, 2019

POLLATA KALAM ITU POLLATAKALAM LYRICS

பொல்லாத காலம் இது பொல்லாத காலம்
புவிவாழ்வு மனிதனின் - நிலைஇல்லா வாழ்வென
புரியாத மனிதனோ அறியாமல் வாழகி்றான்
- பொல்லாத காலம்

1.வேஷமாகவே மனிதன் திரிகிறான் - அவன்
விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்
ஆஸ்தியை அவனியில் மலை போல சேர்க்கிறான்
ஆனாலும் யார் அதை வாரிக் கொள்வார் என்றறியான்
உலகம் முழுவதையும் நீ ஆதாய மாக்கினாலும்
உந்தன் ஆத்துமாவை நீ நஷ்டப் படுத்தினாலோ
இலாபம் ஒன்றும் உனக்கில்லையே (3)
- பொல்லாத காலம்

2.மண்ணிலிருந்து தான் வந்தவன் - இதை
மறந்து போகிறான் இந்த மனிதனே
ஆவியோ தன்னைத் தந்த தேவனிடம் செல்லும் - இந்த
உடல் தான் வந்த மண்ணுக்கே திரும்பும்
ஒன்றுக்கும் உதவாதவீண் சாீரத்தை அலங்கரிக்கிறான்
விலை மதிப்பில்லாத ஆத்துமாவை கெடுத்துக் கொண்டு
பாவத்தை தண்ணீர் போல குடிக்கிறான் - தன்
ஆத்துமாவை நரகத்திலே சேர்க்கிறான்
- பொல்லாத காலம்

3.பாவத்தின் சம்பளம் மரணமே - தேவன்
இயேசுவின் கிருபை நித்தியவனே
வா! வா! ஓடிவா! இயேசுவிடம் ஓடிவா
ஆத்மநேசர் இயேசு உன்னை அழைக்கிறார் - உன்
பாவம் போக்கவே உன்னை அழைக்கிறார்
வாழ்கின்ற நாட்களிலே தேவன் இயேசுவை தேடி ஓடிவா
மனிதா உன்னை மீட்க - அவர் சிலுவையில் மரித்தார்
மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார்
- பொல்லாத காலம்

No comments: