Tuesday, December 10, 2019

VAIKARAIYIL UMAKKAGA VALIMEL

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்

2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா

3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

No comments: