Tuesday, December 10, 2019

STHOTHIRAM SEIVENAE RATCHAGANAI

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
பாத்திரனை யூத கோத்திரனை -என்றும்

அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை

கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை
வான பரன் என்னும் ஞான குருவானை

செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குரவானை
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி

No comments: