Tuesday, December 10, 2019

JEEVANAI PARKILUM UM KIRUBAI

ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே
இவ்வாழ்க்கையைப் பார்க்கிலும்
உம் கிருபை மேலானதே

கிருபை மேலானதே
கிருபை மேலானதே

போக்கிலும் வரத்திலும்
என்னைக் காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னைக்
காத்தது கிருபையே

பெலவீன நேரங்களில்- உம்
கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் - உம்
கிருபை எனை தாங்கிற்றே

கஷ்டத்தின் நேரங்களில்- உம்
கிருபை எனைக் காத்ததே
கண்ணீரின் மத்தியிலும்-உம்
கிருபை எனைத் தேற்றுதே

No comments: