Monday, December 9, 2019

KONDADUVOM NAAM KONDADUVOM

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யேகோவா தேவனைக் கொண்டாடுவோம்

பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
பாடிக் கொண்டாடுவோம்
தீயவன் நடுவில் வருவதில்லை
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம்

அகமகிழ்வோம் அகக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்

நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம்
கர்த்தரின் மகிமை மேகம் போல
இறங்கட்டும் இந்நாளிலே

அசைக்க முடியா கூடாரமாவோம்
அமைதியின் இல்லமாவோம்
நோயாளி என்று சொல்வதில்லை
குற்றங்கள் நீங்கியதே

இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
பிரமாணம் இதுதானே
எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
கட்டளையாய் கொடுத்தார்

பழைய புளித்த மாவை அகற்றி
தூக்கி எறிந்திடுவோம்
துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
அசுத்தம் அகற்றிடுவோம்

எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
முழங்கினார் சிலுவையிலே
சாவுக்கு அதிபதி சாத்தானை
சாவாலே வென்றுவிட்டார்

No comments: