Monday, December 9, 2019

KARAM PITITHTHENNAI VALI NADATHTHUM

கரம் பிடித்தென்னை வழிநடத்தும்
கண்மணி போலக் காத்துக் கொள்ளும் – 2
கரை திரையில்லா வாழ்வளித்து – 2
பரிசுத்தப் பாதையில் நடத்திச் செல்லும் – கரம்

1. மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே
மேய்த்திடும் மேய்ப்பனின் பின்னே செல்வேன் – 2
புல்வெளி மேய்ச்சல் காணச் செய்து
அமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும் – 2
உம் கோலினைக் கொண்டு என் பாதை மாற்றும் – கரம்

2. ஜீவனைத் தந்து என் ஜீவன் மீட்டீர்
ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் – 2
வானிலும் பூவிலும் நிலைநிறுத்தும்
வரங்களினாலே எனை நிரப்பும் – 2
உம் வார்த்தையைக் கொண்டு என் வாழ்வை மாற்றும் – கரம்

No comments: