Monday, December 9, 2019

KALVARIYIL RATHTHAM SINDHINEER

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே
சிலுவை பாடுகளை சகித்தீர்
என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2)

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
உன்னத தேவனுக்கே (2)

பணிந்து உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் சரணடைவேன் (2)

பாவியான என்னை கண்டு
பரலோகம் விட்டு வந்து
பலியானீரே என்னை மீட்கவே (2)
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2)

இயேசுவே இயேசுவே
உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4)

No comments: