Sunday, November 10, 2019

UNMAIYAANA ANBIRKAI KAATHIRUKKIREN

உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்
என் வாழ்நாள் முழுவதுமே
என் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்
துணையாக யார் வருவார்
தரிசித்தேன் நான் தரிசித்தேன் 
நம்பிக்கையற்ற சூழலில் 
வெறுமையான வாழ்க்கையில் 
இயேசுவை நான் தரிசித்தேன்
-உண்மையான
* சோர்வுகள் என் இதயத்தை
சூழ்ந்திருந்த வேளையில்
நான் நம்பின எல்லோரும்
என்னை கைவிட்ட வேளையில் 
கண்ணீரே எந்தன் உணவானதே
கட்டுகளோடே வாழ்ந்திருந்தேனே
உமது வருகையே மகிழ்வை அளித்ததே
உமது நேசமே என்றென்றும் போதுமோ
- உண்மையான
*ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்
ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்
உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததே
ஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததே
உமக்காகவே நான் என்னையே தருகின்றேன் 
உமக்காகவே நான் இறுதி வரை காத்திருப்பேன் 

No comments: