Sunday, November 10, 2019

NAANGA RATHANGALAI KURITHUM

நாங்க இரதங்களை குறித்தும் குதிரையை குறித்தும்
மேன்மையை பாராட்ட மாட்டோம்
எங்க சொத்து சுகம்மெல்லாம் சொல்லி நாங்க
சீனப் போட மாட்டோம்

எங்க தேவனின் நாம மகிமைக்காக வாழ்ந்திடுவோம்
எங்க வாழ்நாளெல்லாம் அவரின் புகழை பாடிடுவோம்
தேவனை பற்றி சொல்ல
தேசமெங்கிலும் செல்ல
மனம் தயங்குவதில்லை நாங்க தானியேலப் போல
மானின் கால்கள் எனக்கு
அக்கினி இரதங்கள் இருக்கு
ஆவியின் கண்கள் எனக்கு
உலகத்தின் வேஷம் எதற்கு 
பாவத்திற்கு மரித்தோம்
பரிசுத்தத்திலே பிழைத்தோம்
இழந்துப்போனதெல்லாம் சிலுவையிலே ஜெயித்தோம்
முழங்கால் யாவும் முடங்கும்
நாவுகள் அறிக்கை செய்யும்
கர்த்தரே தெய்வம் என்ற சத்தம்
பூமி எங்கும் கேட்கும் 
ஓடினாலும் இளைப்பில்ல
நாங்க நடந்தாலும் சோர்வில்ல
எங்க இடுப்பின் கச்சை பாத ரட்சை அவிழ்வதேயில்ல
நாணேற்றின வில்லும்
கூர்மையான அம்பும்
இருபுறமும் கருக்குள்ள
பட்டயத்த பிடித்தோம்

No comments: