Sunday, November 10, 2019

NIRAIVAANA AAVIYAANAVARAE NEER VARUMPOTHU

நிறைவான ஆவியானவரே
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

நிறைவே நீர் வாருமே
நிறைவே நீர் வேண்டுமே
நிறைவே நீர் போதுமே
ஆவியானவரே

வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
பாழானது பயிர் நிலம் ஆகுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

பெலவீனம் பெலனாய் மாறுமே
சுகவீனம் சுகமாய் மாறுமே
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
முடியாததும் சாத்தியமாகுமே

No comments: