Saturday, September 1, 2018

PUVI AALUM MANNAVAN PUL MEDAIYIL LYRICS


புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்
வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்
1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி
2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

No comments: