Saturday, September 1, 2018

ORUNDRUM ILLAI NAANORUNDRUM ILLAI LYRICS

Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்


ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
என்னில் ஏதுமில்லை
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உம் அன்பு பெரியது
1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2
2. ஒன்றுக்கும் உதவாதென்னை
உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
அன்பே என்றீர் மகனே என்றீர்
ஆவியை ஊற்றிவிட்டீர் – 2
3. உம் அன்பை சொல்லிடவே
அழைத்தீரே உம் சேவைக்கு – 2
அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
அடைக்கலமானீரைய்யா – 2

No comments: