Monday, May 28, 2018

SATHIYAMULLAVARAI NAAN ARADHIPPEN LYRICS


சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்
நித்தியமானவரை நான் ஆராதிப்பேன்
சஞ்சலமும் தவிப்பும் என்னை விட்டு ஓடி போனதே
நித்திய மகிழ்ச்சி எந்தன் தலை மேலே வந்ததே
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்
என்னால தாங்க முடியல
என்னால நடக்க முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை ஏந்திகொண்டார்
கர்த்தர் என்னை சுமந்துகொண்டார்
கர்த்தர் என்னை தாங்கிகொண்டார்
கர்த்தர் என்னை தப்புவித்தார்
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்
என்னால எதுவும் முடியல
என்னால ஒன்னும் முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
என்னை பெலப்படுத்துகிற
இயேசு கிறிஸ்துவினால்
எல்லாமே செய்து முடிக்க
எனக்கவர் பெலன் கொடுத்தார்
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்
என்னால கடக்க முடியல
என்னால தாண்ட முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை தோளில் வைத்தார்
மலைகளை தாண்ட வைத்தார்
மான் கால்கள் போல என்னை
வேகமாய் ஓட வைத்தார்
மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

No comments: