Monday, May 28, 2018

ITHUVARAI NADATHI KURAIVINDRI LYRICS

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா
உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா
அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா
கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

No comments: