Wednesday, August 3, 2016

adhi seekirathil neegividum intha

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம்   
சோர்ந்து போகாதே - நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்க படுகின்ற நேரமிது --- சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை
இதனால் நமக்கு வந்திடுமே --- சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாதப் பரலோகம் நாடுகிறோம் --- சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
பாக்கியம் நமக்கு பாக்கியமே --- சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே
மகிழ்ந்து நாமும் களிகூருவோம் --- சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே
மண்ணான நமக்குள் வாழ்கின்றார் --- சோர்ந்து

No comments: