Wednesday, August 3, 2016

AAVIYAI ARULUME SWAMY ENAK LYRICS

பல்லவி

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை

2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை

3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை

No comments: