Sunday, December 27, 2015

UMMAI UYARTHI UYARTHI

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

1. கரம்பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி (2) – உம்மை

2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

5. வலுவூட்டும் திருஉணவே
வாழ வைக்கும் நல்மருந்தே

No comments: