Sunday, December 27, 2015

Imaipoludhum Ennai kaividamaateer

இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
ஒரு நாளும் விட்டு விலகமாட்டீர்
நீர் கைவிடா கன்மலையே
நித்தமும் காப்பவரே

1. நீரே என் அடைக்கலம்
என் கோட்டை என் கேடகம்
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்
வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர்

2. கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை
கொண்டு போய்விடுகிறீர்
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்

3. சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர்
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னை தொடரும்
உம் வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா - (2)

4. பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம்
உந்தன் கையில்
பயமில்லை பயமில்லை என் எதிர்காலம்
உந்தன் கையில்

5. நடத்துவீர் நடத்துவீர் கரம் பிடித்து நடத்துவீர்
காத்துக் கொள்வீர் காத்துக் கொள்வீர்
கண்மணிபோல காப்பீர்

6. அகற்றுவீர் அகற்றுவீர் என் வியாதிகளை அகற்றுவீர்
பார்த்துக்கொள்வீர் பார்த்துக்கொள்வீர்
என் தேவையை பார்த்துக் கொள்வீர்

7. என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
நீண்ட ஆயுசு தந்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை பேழையில் வைத்து காப்பாற்றுவீர்
குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்

No comments: