Sunday, December 27, 2015

Yesu Maharajane meendum

இயேசு மகாராஜனே
மீண்டும் வந்திடுவீரே
உம் மக்களாய் ஒன்று கூடினோம்
உம் மகிமையை தரிசிக்க

பஞ்சங்கள் கொள்ளை நோயும் வாட்டுதே
பூகம்பம் யுத்தங்கள் பெருகுதே
மனிதனின் அன்பு தணிந்து போகுதே
உபத்திரவ காலம் தொடங்குதே

இது என்னவோ என்று சிந்தித்துப் பார் நண்பனே
காலங்கள் இது முடிவுதான் என் நேசமே
இவைகளெல்லாம் வேதனைக்கு ஆரம்பம்
இராஜாதி ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்

உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் அரசு வருவதாக
உம் சித்தம் பூமியெங்கும் நிறைவேறுவதாக
என்னை மன்னித்தது போல் மற்றவர்களை
நானும் மன்னிக்கணுமே
எங்கள் அன்றாட உணவை அனுதினமும்
தரவேண்டுமே
உம் இராஜ்யம் கனமும் வல்லமை
என்றென்றும் உரித்தாகட்டும்

இயேசு மகாராஜனே
மீண்டும் வந்திடுவீரே
உம் மக்களாய் ஒன்று கூடினோம்
உம் மகிமையை தரிசிக்க
மகிமையை தரிசிக்க
மகிமையை தரிசிக்க

இயேசுவே வாருமே
இன்றே வாருமே
இயேசுவே வாருமே
ஆவலாய் நிற்கிறோம்
இயேசுவே இயேசுவே

No comments: