Saturday, December 19, 2015

Raajathi Raajavai Kondaduvoam

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் -நம்

வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு -அந்த

கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லை
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழ்வார்

வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரித்தாரே
அந்த சாத்தான் மேலா அதிகாரம் தந்தார்
என் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி
முறியடிப்பேன் -நம்
கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் -அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்

முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்துக் கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலை நிறுத்திமகிழ்வார்

No comments: