Saturday, December 19, 2015

Aarathikka ummai aarathikka


ஆராதிக்க உம்மை ஆராதிக்க
இன்று ஆராதிக்க கூடியுள்ளோம்
ஊற்றுமய்யா நிரப்புமய்யா
உன்னத பரலோக அபிஷேகத்தால்

உன்னதரே உம்மை ஆராதிப்போம்
உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்
வல்லவரே உம்மை ஆராதிப்போம்
வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
நங்கூரமே உம்மை ஆராதிப்போம்
புகலிடமே உம்மை ஆராதிப்போம்
புகழ்ச்சியே நீரே உம்மை ஆராதிப்போம்

அற்புதரே உம்மை ஆராதிப்போம்
அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்
பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்
பரிகாரியே உம்மை ஆராதிப்போம்

No comments: