Saturday, December 19, 2015

Belan ondrum illai deva

பெலன் ஒன்றும் இல்லை தேவா
உம் ஆவியால் பெலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
உம் சத்துவம் தந்தருளும்

மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் பெலப்படுத்தும்

சாத்தானை ஜெயிக்க பெலன் தாரும்
சோதனை வெல்ல உதவும்
மாய உலகத்தை ஜெயிக்க
என்னையும் பெலப்படுத்தும்

சோர்வுற்ற நேரங்களில் எல்லாம்
வழுவாமல் காத்து நடத்தும்
கழுகு போல் செட்டைகள் அடித்து
உயரே எழும்ப செய்யும்

No comments: