காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் பாடிடும் தொனி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானவர் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர், பாளையமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன் 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில் தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல் |
lyrics
Thursday, September 24, 2015
kaalaiyum maalaiyum evvelaiyum
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment