Thursday, September 24, 2015

OOH BETHLEGEME SITTRURE


ஓ பெத்லெகேமே சிற்றூரே
  1. ஓ பெத்லெகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

2. கூறும் ஓ விடி வெள்ளிகான்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே
பாரில் அமைதியாம்
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்.

No comments: