Tuesday, October 20, 2015

INNALIL YESUNAADHAR UYIRTHAR

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

மகிழ் கொண்டாடுவோம்,
மகிழ் கொண்டாடுவோம்.

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க

3. அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட

4. பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்

5. இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூ
எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம்

No comments: