Tuesday, October 20, 2015

INDRU KANDA EGIPTHIYANAI

1. இன்று கண்ட எகிப்தியனை
என்றுமேஇனி காண்பதில்லை (2)

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை (2) இன்று...

2. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) இஸ்ரவே...

3. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)
வௌ;ம்போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் (2) இஸ்ரவே...

4. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் (2)
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் (2) இஸ்ரவே...

5. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் (2)
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் (2) இஸ்ரவே...

No comments: