இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
சரணங்கள்
1. அதிசயமே அவர் அவதாரம்அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் --- இயேசு
2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் --- இயேசு
3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு --- இயேசு
4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் --- இயேசு
No comments:
Post a Comment