Thursday, September 10, 2015

INDRITHINAM UN ARUL YEEGUVAI

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

அனுபல்லவி

அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு --- இன்றை

சரணங்கள்

1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் - பலவிதமாம்
பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;
ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,
ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் --- இன்றை

2. கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை - யாவிலுமுன்றன்
கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே ,
ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு
மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக --- இன்றை

3. எத்தனையோ விபத்தோர் நாளே - தஞ்சம் நீ என
எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ;
பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன்
சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா --- இன்றை

4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
பண்ணும் போர்களுக் கெதிர் நின்று ,
ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல ,
தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து --- இன்றை

No comments: