Thursday, September 10, 2015

YESU RAAJANIN THIRUVADIKKU

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. துன்ப துயரம் சூழும் வேளையும் - வெகு
கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்
அன்பருக்கருள் தரும் இன்பமே
சரணம் சரணம் சரணம் --- இயேசு

2. ஆடுபோல் அடிக்கப்பட்டீரே - அன்பால்
தேடி எமை மீட்கவந்தீரே - எங்கள்
ஜீவ பலியாய் மாண்டீரே
சரணம் சரணம் சரணம் --- இயேசு

3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் --- இயேசு

No comments: