Thursday, August 27, 2015

THUTHIPPEN YESUVIN PAATHAM THUTHIKKA

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் --- துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை --- துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் --- துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் --- துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் --- துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் --- துதி

No comments: