Thursday, August 27, 2015

JEBA SINTHAI ENIL THAARUM DEVA

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா - என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக் குக்கை
அளித்தேன் பொற்பாதா --- ஜெப

சரணங்கள்

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச - உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச - பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச --- ஜெப

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் - என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
சடமுலகப் பேயை வெல்லும் - நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் --- ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய - தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய - நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய --- ஜெப

No comments: