Monday, June 8, 2015

YESUVAI NAAM ENGE KAANALAM LYRICS

இயேசுவை நாம் எங்கே காணலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்




பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?

கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ?

 1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே --- இயேசுவை

2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ --- இயேசுவை

3. கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறைமுன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் --- இயேசுவை

No comments: