Monday, June 8, 2015

KARTHARIN PANTHIYIL VAA LYRICS

கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா. - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி - கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட - கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு.
பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன பந்திதனில் சேரு.
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே - கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே - கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே.
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா - கர்த்தரின்

No comments: